CCHEP_NLG

Gudalur Consumer Human Resources and Environment Protection Center The Nilgirs

கண் பாதுகாப்பு....

கண் பாதுகாப்பு....
நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்க்க, தெரிந்துகொள்ள நமது இருவிழிகள் தான் முக்கிய காரணமாகின்றன. இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய் _தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண்சம்பந்தமாக பல வகையான நோய்கள் வருகின்றன.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூலமாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கண்ணில் நோய் வரக் காரணமென்ன?

முதலில் கூறியது போல ஆரோக்கியம் இல்லாமல் குழந்தைகளைப் பெறும் பெற்றோர் ஒரு காரணம். சத்துக் குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டாலும் கண்நோய்கள் வரும். பார்வை நரம்பில் ஏற்படும் இரத்தக்குறைவு, இரத்த ஓட்டம் தடைபடுதல், இரத்த அழுத்தம் குறைவு காரணமாகவும் கண்கோளாறுகள் வரலாம். பரம்பரைக் காரணமாகவும் கண் கோளாறுகள் வரலாம். தொற்று நோய்க் கிருமிகள், காற்றில் வருகின்ற கிருமிகள், தூசி, தீ போன்றவற்றாலும் கண் நோய்கள் வரலாம்.

உணவு வகைகளில் கண்களைப் பாதுகாக்க...

வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுகளுக்கு கேரட், பீட்ரூட், வெண் பூசணி, முள்ளங்கி, வெண்டைக்காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம்.பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம்.அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம்.

சத்துக் குறைவால் கண் நோய்கள் நீங்க...

சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட் சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இருவேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்)

பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.

புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம்.

கண்பார்வை தெளிவடைய...

பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.

அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.

பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.
By CCHEP Nilgirs at August 26, 2012 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

கண் பாதுகாப்பு....

கண் பாதுகாப்பு....
நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்க்க, தெரிந்துகொள்ள நமது இருவிழிகள் தான் முக்கிய காரணமாகின்றன. இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய் _தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண்சம்பந்தமாக பல வகையான நோய்கள் வருகின்றன.

முக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்

கிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூலமாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கண்ணில் நோய் வரக் காரணமென்ன?

முதலில் கூறியது போல ஆரோக்கியம் இல்லாமல் குழந்தைகளைப் பெறும் பெற்றோர் ஒரு காரணம். சத்துக் குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டாலும் கண்நோய்கள் வரும். பார்வை நரம்பில் ஏற்படும் இரத்தக்குறைவு, இரத்த ஓட்டம் தடைபடுதல், இரத்த அழுத்தம் குறைவு காரணமாகவும் கண்கோளாறுகள் வரலாம். பரம்பரைக் காரணமாகவும் கண் கோளாறுகள் வரலாம். தொற்று நோய்க் கிருமிகள், காற்றில் வருகின்ற கிருமிகள், தூசி, தீ போன்றவற்றாலும் கண் நோய்கள் வரலாம்.

உணவு வகைகளில் கண்களைப் பாதுகாக்க...

வைட்டமின் ஏ பிரிவு சத்து உடலில் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை, நரம்பு பலவீனம் இவற்றால் வரும் கண் கோளாறுகளுக்கு கேரட், பீட்ரூட், வெண் பூசணி, முள்ளங்கி, வெண்டைக்காய், நாட்டுத் தக்காளி, பசும்பால், பசு மோர், சுத்தமான தேன், கொத்தமல்லி, முளை கட்டிய தானிய வகைகள் இவற்றை தினசரி உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை, முருங்கைக் கீரை, இவைகளில் ஏதாவது ஒரு கீரை வகையை தினமும் சாப்பிடலாம்.பழ வகைகளில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, மாதுளை, ஆப்பிள், பேரீச்சம் பழம், நெல்லிக்காய் சாப்பிடலாம்.அசைவ உணவில் மீன் எண்ணெய் மட்டும் சாப்பிடலாம்.

சத்துக் குறைவால் கண் நோய்கள் நீங்க...

சுத்தமான கேரட் கால் கிலோ எடுத்து சாறு பிழியவும், கொத்தமல்லி இலைச்சாறு 10 மில்லி, தேங்காய் அரை மூடி, ஏலக்காய் 2, தேவையான அளவு சுத்தமான பனங்கற்கண்டு எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைச்சாறு, கேரட் சாறு, தேங்காய் துருவியது, பனங்கற்கண்டு இவற்றுடன் இரண்டு டம்ளர் (400 மில்லி) தண்ணீர் கலந்து ஏலக்காயை பொடி செய்து சேர்த்து காலை / மாலை இருவேளை காபி, டீக்கு பதிலாக தினமும் குடித்து வரலாம். (இதை தினமும் புதிதாக செய்ய வேண்டும்)

பப்பாளிப் பழம் 4 துண்டு, தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் 1 டம்ளர் (200 மில்லி) தேவையான அளவு பனங்கற்கண்டு, ஏலக்காய் 2 பொடி செய்து போட்டுக் கலக்கி தினமும் காலை / மாலை இருவேளைச் சாப்பிடலாம்.

புதிய பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது 5, இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 1 ஸ்பூன் தேன் இவற்றை 1 டம்ளர் தண்ணீரில் போட்டு இருவேளை சாப்பிடலாம்.

கண்பார்வை தெளிவடைய...

பப்பாளிப் பழம் 2 துண்டு, பேரிச்சம் பழம் 4, செர்ரிபழம் 10, அன்னாசி பழம் 2 துண்டு, ஆப்பிள், திராட்சை 50 கிராம், மலை அல்லது ரஸ்தாளி வாழைப்பழம் 2, மாம்பழம் 2 பத்தை, பலாச் சுளை 2 (மாம்பழம் அல்லது பலா_ சீசனில் மட்டும் போட்டால் போதுமானது) இவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் அல்லது பசும் பாலுடன் சேர்த்துக் கலக்கி தேவையான அளவு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட நல்லது.

அறுகம்புல் சாறு 50 மில்லி எடுத்து அத்துடன் ஒரு இளநீர் கலந்து தேவையான அளவு தேன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர குணமாகும்.

பொதுவாக கல்லீரலுக்கும் கண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால் கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். அதற்குக் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட வேண்டும். தினமும் 200 கிராம் திராட்சை சாப்பிட்டுவரலாம். கொழுப்பு உணவுகள், மசாலா உணவுகள், மாமிச உணவுகள், இவற்றைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.
By CCHEP Nilgirs at August 26, 2012 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

குழந்தைக்குப் பெயர் வைக்கும் போது...

உங்கள் குழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி?
பெயர் வைக்கும்போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்னென்ன?
பெயர் வைத்தால் மட்டும் போதுமா? அதை மெய்ண்டெய்ன் செய்வது எப்படி?!

மற்ற இடங்களில் எப்படியோ தெரியாது, தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இது பயன்படலாம்.
(இங்கு ரெக்கார்டுகளில் என்பது ரேசன் கார்டு, லைசன்ஸ், டி.சி., பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றைக் குறிக்கும்)

பெயரின் நீளம்
பெயரை முடிந்த அளவு சுருக்கமாகவும், சிறியதாகவும் வைக்கவும். அனந்தராமகோபாலகிருஷ்ணன் எனுமாறு வைத்தால், பிற்காலத்தில் படிவங்கள் நிரப்பும் போது குழந்தைகள் பெற்றோரை நினைத்துப் பார்க்கக் கூடும். (திட்டுறதுக்குத்தான்).

வார்த்தைகள்
முடிந்த வரை ஒற்றை வார்த்தையாக வைப்பது நலம்; இரண்டிற்கு மேல் செல்வது நல்லதல்ல.

முதல் பதிவு மற்றும் ஸ்பெல்லிங்
குழந்தையின் பெயர் முதன்முதலில் ஏதாவதொரு ரெக்கார்டுகளில் வரும்போது (முன்பு டி.சி. இப்போது பிறப்புச் சான்றிதழாக இருக்கும்), ஸ்பெல்லிங் மற்றும் இன்சியலை (இன்சியல் அடுத்து வருகிறது) சரி பார்த்துக் கொள்ளவும். தவறு ஏதேனும் இருந்தால் முதலிலேயே சிரமம் பார்க்காமல் திருத்திக் கொள்ளவும்.

எனக்குத் தெரிந்து, நண்பர் பிரசாத்(Prasath) என்பவரது பெயர் Presath என்று முதலில் வாங்கிய டி.சி. யில் தவறுதலாக ஏறி விட்டது. அதன்பின் அனைத்து இடங்களிலும் (லைசன்ஸ், பாஸ்போர்ட்...) அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
இதுபோன்ற தவறுகள் ஆரம்பத்திலேயே திருத்தப்படுவதற்கு பெற்றோரே பொறுப்பு.

தந்தை பெயர் மற்றும் இன்சியல்
குழந்தைக்கான ரெக்கார்டுகளில் தந்தை பெயர் என்னும் இடங்களில், தந்தை பெயர் ரெக்கார்டுகளில் என்ன இருக்கிறதோ அதேபோல் இருக்க வேண்டும்.
(தந்தை பெயர் ஆனந்த கிருஷ்ணன் என ரெக்கார்டுகளில் இருக்கும் போது, குழந்தையின் ரெக்கார்டுகளில் தந்தை பெயர் எனும் இடத்தில் ஆனந்த் என இருக்கக் கூடாது)

தந்தை பெயரும் இன்சியலும் ஒத்துப் போக வேண்டும்.
இன்சியல் ஒன்றே ஒன்று இருப்பது நலம். இரண்டுக்கு மேல் இருப்பது நல்லதல்ல.
(குழந்தையின் பெயர் சேகர், தந்தை பெயர் ஆனந்த் என்றால், A.சேகர் என்பது பிரச்சனை இல்லை. தந்தை பெயர் ஆனந்த கிருஷணன் என்றால், A.K.சேகர் என்று வைக்கலாம். ஆனால், தந்தை பெயர் எனும் இடத்தில் ஆனந்த் என்றும், குழந்தை பெயர் A.K.சேகர் என்றும் இருப்பது தவறு. அதேபோல, தந்தை பெயர் G.ஆனந்த் எனும்போது, குழந்தைக்கு G.A.சேகர் என்று வைப்பது நல்லதல்ல; A.சேகர் என்பதே சிறந்தது)

அழைக்கும் பெயர்
ரெக்கார்டுகளில் ஒரு பெயரும், அழைப்பதற்கு இன்னொரு பெயரும் வைக்கும் பழக்கத்தைத் தவிர்க்கவும்.

சுப்பிரமணி என ரெக்கார்டுகளில் இருக்கும்போது, ராம்ஜி என அழைத்து, அந்த பெயரே நிலைத்துவிட்டது நண்பர் ஒருவருக்கு. இங்கு, அவர் வீட்டிலில்லாதபோது தபால் வந்தால், பக்கத்து வீடுகளில் விசாரிக்கப் படும்போது, ‘சுப்பிரமணி’ என்றால் யார் என்றே தெரியாது என சொல்லப்பட வாய்ப்பு உள்ளது.

அதேபோல, ஆனந்த கிருஷ்ணன் போன்று இரு வார்த்தை உள்ளவர்களுக்கு இதே பிரச்சனை வரலாம். குடும்பத்தார் ஆனந்த் என்றும், பிறர் கிருஷ்ணன் என்றும் அழைத்துப் பழகிவிட வாய்ப்புள்ளது. இங்கும் அதேபோல, யாரேனும் உறவினர் அவரைத் தேடி வரும்போது, பக்கத்து வீட்டுக்காரரிடம் ‘ஆனந்த் வீடு தெரியுமா?’ எனக் கேட்க, கிருஷ்ணன் என்றே தெரிந்த அவர் ‘தெரியாது’ எனக் கூற வாய்ப்புள்ளது. ஆகவே ஒரே வார்த்தையில் பெயர் வைப்பது நலம்.

(இப்போது உள்ள நடைமுறைகள் என்னவென்று தெரியவில்லை, ஆயினும் ஒரு சில கருத்துக்கள் பயன்படலாம்)

---

(எனது கேரள நண்பர்களின் ரெக்கார்டுகளைப் பார்க்கும்போது, அவர்கள் இன்சியல் பயன்படுத்தாதது தெரிந்தது. அவர்களது ரெக்கார்டுகளில் TIJU ANTONY எனுமாறே இருக்கிறது, ANTONY என்பது தந்தை பெயர், இங்கு இன்சியல் பிரச்சனை இல்லை.)

---

சில சந்தேகங்கள்....
1. கெசட்டில் பெயர் மாற்றுவது என்றால் என்ன?
2. அதைச் செய்வது எப்படி?
3. அப்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?
4. பெயர், தந்தை பெயர் என வழக்கில் இருக்கும் நமக்கு, படிவங்களில் First Name, Middle Name, Last Name, Surname என்றெல்லாம் இருப்பது ஏன்?

யாரேனும் பதில் சொன்னால் நல்லது.

---

மேலும், பெயர் சம்பந்தமான இதர பிரச்சனைகள் மற்றும் மனோரீதியான பாதிப்புகளைப் பற்றி யாரேனும் தொடர்ந்து கூறினால் நலம்.

By CCHEP Nilgirs at August 26, 2012 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

குழந்தைக்குப் பெயர் வைக்கும் போது...


உங்கள் குழந்தைக்குப் பெயர் வைப்பது எப்படி?
பெயர் வைக்கும்போது கவனிக்க வேண்டிய விசயங்கள் என்னென்ன?
பெயர் வைத்தால் மட்டும் போதுமா? அதை மெய்ண்டெய்ன் செய்வது எப்படி?!

மற்ற இடங்களில் எப்படியோ தெரியாது, தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இது பயன்படலாம்.
(இங்கு ரெக்கார்டுகளில் என்பது ரேசன் கார்டு, லைசன்ஸ், டி.சி., பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றைக் குறிக்கும்)

பெயரின் நீளம்
பெயரை முடிந்த அளவு சுருக்கமாகவும், சிறியதாகவும் வைக்கவும். அனந்தராமகோபாலகிருஷ்ணன் எனுமாறு வைத்தால், பிற்காலத்தில் படிவங்கள் நிரப்பும் போது குழந்தைகள் பெற்றோரை நினைத்துப் பார்க்கக் கூடும். (திட்டுறதுக்குத்தான்).

வார்த்தைகள்
முடிந்த வரை ஒற்றை வார்த்தையாக வைப்பது நலம்; இரண்டிற்கு மேல் செல்வது நல்லதல்ல.

முதல் பதிவு மற்றும் ஸ்பெல்லிங்
குழந்தையின் பெயர் முதன்முதலில் ஏதாவதொரு ரெக்கார்டுகளில் வரும்போது (முன்பு டி.சி. இப்போது பிறப்புச் சான்றிதழாக இருக்கும்), ஸ்பெல்லிங் மற்றும் இன்சியலை (இன்சியல் அடுத்து வருகிறது) சரி பார்த்துக் கொள்ளவும். தவறு ஏதேனும் இருந்தால் முதலிலேயே சிரமம் பார்க்காமல் திருத்திக் கொள்ளவும்.

எனக்குத் தெரிந்து, நண்பர் பிரசாத்(Prasath) என்பவரது பெயர் Presath என்று முதலில் வாங்கிய டி.சி. யில் தவறுதலாக ஏறி விட்டது. அதன்பின் அனைத்து இடங்களிலும் (லைசன்ஸ், பாஸ்போர்ட்...) அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
இதுபோன்ற தவறுகள் ஆரம்பத்திலேயே திருத்தப்படுவதற்கு பெற்றோரே பொறுப்பு.

தந்தை பெயர் மற்றும் இன்சியல்
குழந்தைக்கான ரெக்கார்டுகளில் தந்தை பெயர் என்னும் இடங்களில், தந்தை பெயர் ரெக்கார்டுகளில் என்ன இருக்கிறதோ அதேபோல் இருக்க வேண்டும்.
(தந்தை பெயர் ஆனந்த கிருஷ்ணன் என ரெக்கார்டுகளில் இருக்கும் போது, குழந்தையின் ரெக்கார்டுகளில் தந்தை பெயர் எனும் இடத்தில் ஆனந்த் என இருக்கக் கூடாது)

தந்தை பெயரும் இன்சியலும் ஒத்துப் போக வேண்டும்.
இன்சியல் ஒன்றே ஒன்று இருப்பது நலம். இரண்டுக்கு மேல் இருப்பது நல்லதல்ல.
(குழந்தையின் பெயர் சேகர், தந்தை பெயர் ஆனந்த் என்றால், A.சேகர் என்பது பிரச்சனை இல்லை. தந்தை பெயர் ஆனந்த கிருஷணன் என்றால், A.K.சேகர் என்று வைக்கலாம். ஆனால், தந்தை பெயர் எனும் இடத்தில் ஆனந்த் என்றும், குழந்தை பெயர் A.K.சேகர் என்றும் இருப்பது தவறு. அதேபோல, தந்தை பெயர் G.ஆனந்த் எனும்போது, குழந்தைக்கு G.A.சேகர் என்று வைப்பது நல்லதல்ல; A.சேகர் என்பதே சிறந்தது)

அழைக்கும் பெயர்
ரெக்கார்டுகளில் ஒரு பெயரும், அழைப்பதற்கு இன்னொரு பெயரும் வைக்கும் பழக்கத்தைத் தவிர்க்கவும்.

சுப்பிரமணி என ரெக்கார்டுகளில் இருக்கும்போது, ராம்ஜி என அழைத்து, அந்த பெயரே நிலைத்துவிட்டது நண்பர் ஒருவருக்கு. இங்கு, அவர் வீட்டிலில்லாதபோது தபால் வந்தால், பக்கத்து வீடுகளில் விசாரிக்கப் படும்போது, ‘சுப்பிரமணி’ என்றால் யார் என்றே தெரியாது என சொல்லப்பட வாய்ப்பு உள்ளது.

அதேபோல, ஆனந்த கிருஷ்ணன் போன்று இரு வார்த்தை உள்ளவர்களுக்கு இதே பிரச்சனை வரலாம். குடும்பத்தார் ஆனந்த் என்றும், பிறர் கிருஷ்ணன் என்றும் அழைத்துப் பழகிவிட வாய்ப்புள்ளது. இங்கும் அதேபோல, யாரேனும் உறவினர் அவரைத் தேடி வரும்போது, பக்கத்து வீட்டுக்காரரிடம் ‘ஆனந்த் வீடு தெரியுமா?’ எனக் கேட்க, கிருஷ்ணன் என்றே தெரிந்த அவர் ‘தெரியாது’ எனக் கூற வாய்ப்புள்ளது. ஆகவே ஒரே வார்த்தையில் பெயர் வைப்பது நலம்.

(இப்போது உள்ள நடைமுறைகள் என்னவென்று தெரியவில்லை, ஆயினும் ஒரு சில கருத்துக்கள் பயன்படலாம்)


(எனது கேரள நண்பர்களின் ரெக்கார்டுகளைப் பார்க்கும்போது, அவர்கள் இன்சியல் பயன்படுத்தாதது தெரிந்தது. அவர்களது ரெக்கார்டுகளில் TIJU ANTONY எனுமாறே இருக்கிறது, ANTONY என்பது தந்தை பெயர், இங்கு இன்சியல் பிரச்சனை இல்லை.)



சில சந்தேகங்கள்....
1. கெசட்டில் பெயர் மாற்றுவது என்றால் என்ன?
2. அதைச் செய்வது எப்படி?
3. அப்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?
4. பெயர், தந்தை பெயர் என வழக்கில் இருக்கும் நமக்கு, படிவங்களில் First Name, Middle Name, Last Name, Surname என்றெல்லாம் இருப்பது ஏன்?

யாரேனும் பதில் சொன்னால் நல்லது.


மேலும், பெயர் சம்பந்தமான இதர பிரச்சனைகள் மற்றும் மனோரீதியான பாதிப்புகளைப் பற்றி யாரேனும் தொடர்ந்து கூறினால் நலம்.
By CCHEP Nilgirs at August 26, 2012 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

நீலகிரியில் 30 சதவீதம் பேர் வாகன காப்பீட்டை புதுப்பிப்பதில்லை:கள ஆய்வில் தகவல்

ஊட்டி:நீலகிரியில், 80 சதவீதத்தினருக்கு காப்பீடு புதுப்பிப்பதற்கான தகவல் கிடைக்கப் பெறுவதில்லை எனவும்; 30 சதவீத இரு சக்கர வாகன உரிமையாளர்கள், தங்களின் வாகனக் காப்பீட்டை புதுப்பிப்பதில்லை எனவும், "கான்சர்ட்' அமைப்பு நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் உள்ள நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (கான்சர்ட்), வாகன காப்பீடு நிறுவனங்கள், நுகர்வோருக்கு முறையாக சேவையை வழங்கி வருகிறதா என்பது குறித்து, மாநிலம் தழுவிய ஆய்வு மேற்கொண்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மக்கள் மையம் ஆகியவற்றுடன் இணைந்து, "கான்சர்ட்' நிறுவனம்,கள ஆய்வு நடத்தியது.

ஆய்வு விவரம்: இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்களில் பெரும்பான்மையானோர், அரசின் வாகன பதிவின்போது அதன் பயனையோ, அவசியத்தையோ பெரிதாக கருத்தில் கொள்வதில்லை. வாகன காப்பீடு, 95 சதவீதத்தினர் நேரடியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தை நாடி எடுத்துக் கொள்கின்றனர். அங்கு வழங்கும் படிவங்களை படிக்காமல் கையெழுத்திட்டு விண்ணப்பங்களை அவர்களே நிரப்பி விடுகின்றனர்.80 சதவீதத்தினர், காப்பீடு புதுப்பிப்பதற்கான தகவல் கிடைக்கப் பெறுவதில்லை. 30 சதவீதத்தினர் இரு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு புதுப்பித்து கொள்வதில்லை. பதிவை புதுப்பிக்க வேண்டிய சூழலில் மட்டுமே, வாகன காப்பீட்டை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.காப்பீடு செய்தோரில் 45 சதவீதத்தினர் மட்டுமே, வாகன விபத்து அல்லது வாகனம் காணாமல் போனால், காப்பீட்டு நிறுவன இலவச தொலைபேசி வாயிலாக 48 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிப்பதை அறிந்து வைத்துள்ளனர்.

பெரும்பாலும் வாகன காப்பீடு எடுப்போர், அதனால் பயன் கிடைக்கும் என்பதை விட, வாகன பதிவை செய்ய காப்பீடு அவசியம் என்று கருதியே, காப்பீடு பெறுகின்றனர்.

10 சதவீதத்தினர் வாகனம் வாங்கி கொடுக்கும் இடைதரகர்களே அனைத்து வேலைகளையும் முடித்து கொடுப்பதால், எந்த நிறுவனத்தில் காப்பீடு எடுத்துள்ளோம் என்பதை அறியாமல் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 காப்பீடு நிறுவனங்கள் நுகர்வோருக்கு முழுமையான தகவல்களை தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் விளக்கினார்.
By CCHEP Nilgirs at August 26, 2012 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

குழந்தை

தாய்ப்பால், Breast milk  Feeding குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி ஆரோக்கியமான குழந்தையை உருவாக்குங்கள்

எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...! கருப்பின குழந்தை

வெளிநாட்டு இந்துக்கள் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக்களஞ்சியமே ....!

By CCHEP Nilgirs at August 26, 2012 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

ccc emplom



By CCHEP Nilgirs at August 25, 2012 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

CCHEP_NLG தேடல் முடிவுகள்


    1. cchepnlg@gmail.com 
    ஸ்கீரின் ரீடர் பயனர்கள், Google விரைவுத்தேடலை அணைக்க, இங்கே கிளிக் செய்க.


      பக்கம் 2
      பக்கம் 3
      பக்கம் 4
      பக்கம் 5
      பக்கம் 6
      பக்கம் 7
      பக்கம் 8
      பக்கம் 9
  • By CCHEP Nilgirs at August 25, 2012 No comments:
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Newer Posts Older Posts Home
    Subscribe to: Posts (Atom)

    நுகர்வோர் தின விழிப்புணர்வு

     உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...

    • காவல் நிலை ஆணைகள்
      ‬:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
    • வாடகை ஒப்பந்த பத்திரம் - மாதிரி
      வாடகை ஒப்பந்த பத்திரம் - மாதிரி வாடகை ஒப்பந்த பத்திரம் --------- ம் வருடம் ---------------- மாதம் ---- ஆம் தேதி 23, சேதுபதி நகர், chennai ...
    • மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
      மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...

    Contributors

    • CCHEP Nilgiris
    • CCHEP Nilgirs

    Blog Archive

    • ►  2025 (2)
      • ►  March (1)
      • ►  February (1)
    • ►  2024 (101)
      • ►  September (13)
      • ►  August (3)
      • ►  July (1)
      • ►  June (7)
      • ►  May (5)
      • ►  April (5)
      • ►  March (10)
      • ►  February (28)
      • ►  January (29)
    • ►  2023 (47)
      • ►  December (43)
      • ►  August (3)
      • ►  April (1)
    • ►  2022 (7)
      • ►  February (4)
      • ►  January (3)
    • ►  2021 (49)
      • ►  December (10)
      • ►  November (9)
      • ►  October (4)
      • ►  March (20)
      • ►  February (1)
      • ►  January (5)
    • ►  2020 (29)
      • ►  December (3)
      • ►  November (4)
      • ►  October (15)
      • ►  September (2)
      • ►  August (1)
      • ►  July (3)
      • ►  January (1)
    • ►  2019 (71)
      • ►  June (6)
      • ►  May (17)
      • ►  April (5)
      • ►  March (6)
      • ►  February (31)
      • ►  January (6)
    • ►  2018 (135)
      • ►  December (11)
      • ►  October (5)
      • ►  September (13)
      • ►  August (9)
      • ►  July (12)
      • ►  June (14)
      • ►  May (15)
      • ►  April (16)
      • ►  March (6)
      • ►  February (21)
      • ►  January (13)
    • ►  2017 (173)
      • ►  December (17)
      • ►  November (19)
      • ►  October (33)
      • ►  September (21)
      • ►  August (37)
      • ►  July (33)
      • ►  April (7)
      • ►  February (3)
      • ►  January (3)
    • ►  2016 (30)
      • ►  December (4)
      • ►  November (12)
      • ►  August (1)
      • ►  July (8)
      • ►  March (1)
      • ►  February (4)
    • ►  2015 (115)
      • ►  December (3)
      • ►  November (5)
      • ►  October (16)
      • ►  September (12)
      • ►  August (5)
      • ►  July (28)
      • ►  June (11)
      • ►  May (11)
      • ►  April (1)
      • ►  March (1)
      • ►  January (22)
    • ►  2014 (65)
      • ►  December (2)
      • ►  November (2)
      • ►  October (16)
      • ►  September (6)
      • ►  August (7)
      • ►  July (1)
      • ►  June (3)
      • ►  May (3)
      • ►  April (8)
      • ►  March (3)
      • ►  February (2)
      • ►  January (12)
    • ►  2013 (173)
      • ►  December (29)
      • ►  November (7)
      • ►  October (24)
      • ►  September (5)
      • ►  August (24)
      • ►  July (11)
      • ►  May (5)
      • ►  April (6)
      • ►  March (21)
      • ►  February (14)
      • ►  January (27)
    • ▼  2012 (147)
      • ►  December (18)
      • ►  November (25)
      • ►  October (9)
      • ►  September (21)
      • ▼  August (25)
        • கண் பாதுகாப்பு....
        • கண் பாதுகாப்பு....
        • குழந்தைக்குப் பெயர் வைக்கும் போது...
        • குழந்தைக்குப் பெயர் வைக்கும் போது...
        • நீலகிரியில் 30 சதவீதம் பேர் வாகன காப்பீட்டை புதுப்...
        • குழந்தை
        • ccc emplom
        • CCHEP_NLG தேடல் முடிவுகள்
        • THE CONSUMER PROTECTION ACT, 1986
        • consumer rights 1
        • CONSUMER RIGHTS 2
        • devil effoct of tobbco
        • அயோடினின் பயன்களை பெண்கள் தெரிந்துகொண்டால், பந்தலூ...
        • உங்கள் பெயருக்குரிய அர்த்தம் தெரிய வேண்டுமா?????
        • கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் 110வது...
        • பொன்னானி இலவச கண் சிகிச்சை முகாம்
        • அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை வீண்?...
        • சுய வேலை வாய்ப்பு பயிற்சி தகவல் இல்லாததால் "வெறிச்'
        • "கவர்ச்சிகர விளம்பரங்களால் ஏமாற வேண்டாம்'
        • உதவியாளர் இல்லாத பள்ளி வாகனங்களில் பாதுகாப்பில்லை ...
        • கல்வி அவசியங்கள் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்...
        • கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம்
        • இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நுகர்வோர் அமைப...
        • பந்தலூரில் பிடிபட்டது ராஜநாகம்: கூடலூர் வனத்தில் வ...
        • இரவில் ரேஷன் பொருட்களை கடைகளுக்கு எடுத்து செல்ல தடை
      • ►  July (47)
      • ►  June (2)

    Labels

    • act
    • ccc
    • consumer
    • tea

    Report Abuse

    • CCHEP_NLG
      நுகர்வோர் தின விழிப்புணர்வு - உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக நுகர்வோர்...
      2 months ago
    • CCONSUMER PROTECTION CENTER
      குன்னூர் பிரவிடன்ஸ் கல்லூரி திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு - நீலகிரி மாவட்ட திசைகாட்டி, குன்னூர் பிரவிடன்ஸ் கல்லூரி பிரென்ஞ் துறை, கூடலூர் நுகர்வோர் மளிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து கல்லூரியில் திச...
      6 years ago
    • நுகர்வோர் பாதுகாப்பு மையம்
      முதலை குரங்கிற்குக் கதை கூறுகிறது - (முதலை குரங்கிற்குக் கதை கூறுகிறது) ஒரு நாள் தனிமையிலிருக்கும்போது உதிட்டிரனைப் பார்த்துக் கேட்கிறான் *அரசன்:* எந்தப் போரில் உனக்கு இந்த வெட்டுக்காயம் ஏற்ப...
      8 years ago
    • Ganthi
      CCHEP 2016 EYE CAMP CHERAMBADI 14.02.2016 - பந்தலூர் 2016 பிப் 15 பந்தலூர் அருகே சேரம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது. கூடலூர் நுகா்வோர் மனிதவள சுற்ற...
      9 years ago
    • FEDCON
      cchep Cherangodu Eye camp 6.12.2015 -
      9 years ago
    • ganthi 1
      பந்தலூர் வட்டத்தில் செவிலியர் பயிற்சி மையம் - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, பணிவான வணக்கங்கள் நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் பல்வேறு தோட்ட தொழிலாளர்கள், சிறு குறு விவசாயிகள், கூலி தொழில...
      10 years ago
    • cchep citizen center
      நீலகிரி மாவட்டத்திலும் இலவச கழிப்பிடங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீலகிரி மாவட்டத்திலும் இலவச கழிப்பிடங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊட்டி; "நீலகிரி மாவட்டத்தில் தற்போது தற்காலிக கழிப்பிடங்கள் அமைத்து, பரா...
      11 years ago
    • CCHEP_NLG மக்கள் மையம்
      -

    My Blog List

    welcome

    welcome
    அனைவருக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் - நீலகிரி pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

    Followers

    Subscribe To http://cchepnlg.blogspot.in/

    Posts
    Atom
    Posts
    All Comments
    Atom
    All Comments
    • Home

    Search This Blog

    Travel theme. Theme images by hanoded. Powered by Blogger.