பந்தலூர் : கூடலூர் கல்வி மாவட்டத்தில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரிய பணியிடங்களை பூர்த்தி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தலைவர் சிவசுப்ரமணியம், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தேசிய ஆலோசகருக்கு அனுப்பியுள்ள மனு:பந்தலூர், கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகள் கூடலூர் கல்வி மாவட்டதிற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.இதன் கட்டுப்பாட்டில் 63 ஆரம்ப பள்ளிகள், 34 நடுநிலைப்பள்ளிகளும் செயல்படுகிறது. மேலும் டான்டீ பகுதியில் 6 ஆரம்ப பள்ளிகளும் செயல்படுகிறது.மொத்தம் 97 பள்ளிகள் செயல்படும் நிலையில், இதில் 80 இடைநிலை ஆசிரிய பணியிடங்கள் காலியாக உள்ளது. இதில் 20 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில்,பி.டி.ஏ. மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களிடம் பணம் வசூலித்து மாத சம்பளம் வழங்குவதால் தனியார் பள்ளிகளாக அரசுப்பள்ளிகள் மாறி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆதிவாசி மற்றும் தோட்ட தொழிலாளர்களாக உள்ள பெற்றோர்களுக்கு செலவினம் ஏற்படுகிறது. எனவே, இலவசமாக வழங்கப்படும் கல்வி முழுமையாக கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
கர்ப்பிணிகளுக்கான மனநலன் விழிப்புணர்வு நெலாக்கோட்டை
நெலாக்கோட்டை அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் ஆல் தி சில்ரன் அமைப்பு ஆகியன ச...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
https://kutumbapp.page.link/Dva5RTUpZAbb1pR57 பட்டா பதிவு புத்தக சட்டம் 1983 1. பிரிவு 3(1) - ன் கீழ் வட்டாட்சியர் நில உரிமையாளருக்கும் ...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
No comments:
Post a Comment