பெண்கள் மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம்

கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடை பெற்றது 


கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலை பள்ளியில் நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் பள்ளி நிர்வாகம் இணைந்து செயல் படுத்தும் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் கூட்டம் பள்ளி கூட்ட அரங்கில் நடைப்பெற்றது 
 
கூட்டத்திற்கு பள்ளி   தலைமை ஆசிரியர் சூசை மேரி தலைமை வகித்தார் பள்ளி நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை ஸ்வீடி  முன்னிலை வகித்தார்  

கூட்டத்தில் சிறப்பு அழைப்பா ளராக  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்பிரமணியம்  பேசுகையில், ""நுகர்வோர், தங்களுக்கான உரிமைகளை அறியாததால், பல நிலைகளில் ஏமாற்றப்படுகின்றனர். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1990ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச் சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் பள்ளிகளில் நுகர்வோர் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
தரமற்றப் பொருட்கள், போலி பொருட்கள் வாங்குவதிலிருந்து பாதுகாப்பு பெற, தரமான பொருட்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள தர குறியீடுகளை பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும். பொருட்களின் தகவல் கேட்டு பெறுவதற்கும் , தேவையான சேவை அல்லது பொருட்களை தேர்வு செய்வதற்கும்  உரிமை உள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளில் குறைபாடுகள் இருப்பின் சம்மந்தபட்ட துறை அலுவலர்கள் அல்லது மாவட்ட ஆட்சியருக்கு புகார்களை எழுதி அனுப்பிட வேண்டும் பல கடைகளில் எடைகுறைவு மற்றும் தர குறைவான பொருட்கள் விற்பனை செய்யபடுவதை தெரிவிக் காத்ததினால் தொடர்ந்து அவை சந்தையில் விற்பனை செய்யபடுகிறது . அதுபோல விளம்பரங்களில் பிரபலங்கள் தோன்றி அவர்கள் சொல்வதை நம்பி பொருட்கள் வாங்கி பயன்படுத்துவதை, சிலர் கவுரவமாக கருதுகின்றனர். நுகர்வோர், போலி விளம்பரங்களை நம்பி ஏமாறக் கூடாது. நிதி நிறுவனம், நில விற்பனை உட்பட அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொண்டு விழிப்புடன் இருந்தால், ஏமாற்றப்படுவதை தவிர்க்க முடியும்,  உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரித்துள்ளது. உணவு பொருட்களை வாங்கும் முன் அவை தரமானதா என ஆய்வு செய்து பொருட்களை வாங்க வேண்டும்  நிறங்கள் சுவையூட்டிகள் கலந்த  கலப்பட உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால், உடலில் பல்வேறு நோய் ஏற்பட காரணமாகிறது. தர முத்திரைகளை கொண்ட தரமான உணவுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்,'' என்றார். 

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் காலின், பாத்திமா, பிரான்சிஸ், விஜய லட்சுமி பள்ளி குடிமக்கள்  நுகர்வோர் மன்ற மாணவிகள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக  பள்ளி குடிமக்கள்  நுகர்வோர் மன்ற தலைவர் கிருஷ்ண குமாரி வரவேற்றார் முடிவில்  ணவி பிரிய தர்சினி நன்றி கூறினார் 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...