ஊட்டியில் தேசிய இளைஞர் தினம்

 ஊட்டி, ஜன. 13:நேரு
யுவகேந்திரா மற்றும் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் ஊட்டியில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்து பேசுகையில்: இளைஞர்கள், அரசியல், சாதி, மதம், இனம் என்ற அடிமை கோட்பாட்டிலிருந்து விடுபட்டு சமூக அவலங்களை போக்க வேண்டும் என்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நேரு யுவக்கேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் பேசுகையில், இளைஞர்கள் சமூக சேவை பணிகளில் ஈடுபட வேண்டும். இளைஞர் மன்றங்கள் செயல்பட அரசு பல்வேறு உதவிகள் செய்ய வேண்டும் என்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கேத்தி நஞ்சன், நேரு யுவக்கேந்திரா உதவி ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், கவிஞர் நீலமலை ஜேபி., உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...