செயற்குழு கூட்டம் தீர்மாணங்கள்


பெறுனர்
            மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்
            தமிழக அரசு, சென்னை.

            ஆணையாளர் அவர்கள்
            உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
            சென்னை.

பொருள்   நீலகிரி மாவட்டம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் 
      செயற்குழு கூட்டம் தீர்மாணங்கள் நடைப்பெற்றது. 
      தக்க நடவடிக்கை எடுக்க கேட்டல் சார்பாக.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் செயற்குழு கூட்டம் பந்தலூரில் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு மைய தலைவர் சி. காளிமுத்து தலைமை தாங்கினார்.

பொது செயலாளர் சு. சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.      அமைப்பின் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்பு தந்து உதவிய அனைத்து அரசு துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பள்ளி கல்லூரி நிர்வாகங்களுக்கும். அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்தல்

2.      கூடலூர் பந்தலூர் பகுதிகளில் இயக்கப்படும் 108 அவசர ஊர்திகள் பெரிய வாகணங்களாக இயக்கப்பட்டது.  அவை தற்போது சிறிய உயரம் குறைந்த வாகணங்களாக இயக்கப்படுவதால் கர்ப்பினி பெண்கள் மற்றும் இதர நோயாளிகள் இந்த வாகணத்தில் கொண்டு செல்வது சிரம்மப்படும் நிலை உள்ளது.  வாகணங்களில் திடீரென பிரசவம் ஆகும் நிலையில் அவர்களுக்கு பிரசவம் பார்க்கவோ,  மற்ற நோயளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவோ மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.  எனவே ஏற்கனவே வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் பெரிய வாகணத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.      பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளில் அரசு நிர்ணயித்த தகுதியில்லாத ஆசிரியர்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர்.  இவர்கள் தகுதி குறித்து போலி விளம்பரம் வருவதால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.  அதுகுறித்து கல்வித்துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

4.      பள்ளிகளில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.  இதனை தேர்வுக்கு முன்னதாக வரும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளிலும் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5.      உப்பட்டி பழங்குடியினர் தொழிற்நுட்ப பயிற்சி மையத்தின் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். இந்த பயிற்சி மையத்திற்கு தற்போது பழங்குடியின மாணவர்கள் மட்டும் சேர்க்கப்படுவதால் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.  எனவே இதர பிரிவு மாணவர்கள் 50 சதவீதம் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  
6.      தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் உறுப்பினர் சோ்க்கைக்கு ஒவ்வெரு வட்டத்திலும் வாரிய அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய குழு மூலம் முகாம் நடத்தப்பட்டது.  இது பல அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பயனளித்தது.  அதுபோல் மீண்டும் முகாம்கள் நடத்த வேண்டும்.

7.      மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் சில பழுதடைந்து உள்ளது.  இவற்றை ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும் எனவும், பேருந்துகள் உரிய நேரங்களில் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போக்குவரத்து கழகத்தினை கேட்டல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.

8.      மாவட்ட ஆட்சியர் மற்றும் குழுவினர் சுகாதாரம் காக்க பிரச்சாரம் மற்றும் ஆய்வுகள் மேற்க்கொண்டு வருகின்றனர்.  ஆனால் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் கழிப்பிடங்களை குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து கழகங்கள் மூலம் நடத்தப்படும் அனைத்து கழிப்பிடங்களையும் இலவசமாக அனுமதிக்க வேண்டும்.  வெளியிடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.  இது நேர்மாறாக உள்ளது.  இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுத்து இலவச சிறுநீர் கழிப்பிடத்தை அமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

9.      உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதம் ஒரு முறையேனும் உணவு பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.  உணவு பாதுகாப்பு உரிமம் பெறாதவா்கள் உரிமம் பெறும் வகையில் முக்கிய இடங்களில் முகாம்கள் நடத்த வேண்டும்.

கூட்டத்தில் அமைப்பின் பொருளாளர் ஜெயச்சந்திரன், துணை தலைவர் மஞ்சுளா, கணேசன்,  இணை செயலாளர்கள் இந்திராணி, செல்வராஜ், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இப்படிக்கு


சு. சிவசுப்பிரமணியம்                                                                                 சி காளிமுத்து
பொது செயலாளர்                                                                                      தலைவர்



No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...