கர்ப்பிணிபெண்கள்* - 3

 *#கர்ப்பிணிபெண்கள்* - 3


போலிக் அமிலக் குறைபாடு

 

1. கை கால்கள் சில்லிட்டுப் போதல்.


2. கை கால்களில் சிறு உதறல் ஏற்படுதல்


3. குதிக்கால் வலி பிரதானமாக இருத்தல்.


4. தோல் வெளுப்பாக இருத்தல்.

5. ஞாபக மறதி அதிகமாக இருத்தல்


6. சதைப் பிடிப்பும், வாய்வுப் பிடிப்பும் அதிகமாக இருத்தல்


7. நரம்புத் தளர்ச்சி ஏற்படுதல்.

8. இரத்தச் சோகை அதிகரித்தல்


9. மதியம் சாப்பிட்ட பின், கொஞ்சமாவது தூங்கினால்தான் அடுத்த வேலையைச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்படுதல்.


கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மருந்து உட்கொண்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.


கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.


வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.


பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.


கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம்.


உடல் காரணங்களால் மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. 


கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு. தேவைக்கேற்ப குடிக்கலாம். 


கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 643233.

No comments:

Post a Comment

போக்சோ சட்டத்தின் வழக்குகளை விரைந்து முடிக்க

 போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்துகிறது   அது எப்படியிருந்தாலும், சட்டத்தின்...