மேனுவல் பட்டா பெயர்* *மாற்றம்

 *வெறும் மேனுவல் பட்டா பெயர்*   *மாற்றம் மட்டும் செய்தால் போதாது* *சிட்டா,அ-பதிவேடு,புலப்பத்திலும்* *மாற்றம் செய்யபட வேண்டும்*


1.இப்பொழுது பட்டா மனு செய்யும் முறை ஆன்லைன் ஆகிவிட்டது. இதற்கு முதல் எல்லாம் பட்டா மனு செய்ய தேவையான ஆவணங்களை நகல் எடுத்து அன்றைய தேதி வரை EC எடுத்து பட்டா வேண்டி கேட்கும் மனுவை இணைத்து அனைத்தையும் ஒரு நூலால் கட்டி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் கொடுக்கும்படி இருந்தது .


2.மனு செய்வதற்கு என்று எந்தவிதமான கட்டணமும் இல்லை. ஆனால் இப்போதைய ஆன்லைன் முறையில் பட்டா மனு செய்யும் போது மனு கட்டணம் ரூ.50 வாங்குகிறார்கள். (சில இடங்களில் அதிகமாகவே வாங்குகிறார்கள் ) இதன் மூலமே வருவாய்துறை இப்பொழுது பல இலட்ச ரூபாய்களை சம்பாதிக்க ஆரம்பித்து விட்டது.


3.ஆன்லைன் பட்டா மனு செய்ய கூட்டுறவு சொசைட்டி , தாலுகா அலுவலகங்ளில் உள்ள E.சேவை மையங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை தான் நிலவுகிறது. கரண்ட் இல்லை, சர்வர் வேலை செய்யவில்லை, கம்யூட்டர் சரி இல்லை என்று கிராம மக்கள் பத்து கிலோமீட்டர் இரண்டு மூன்று நாள் தொடர்ந்து பயணம் செய்து, இரண்டு நாள் காட்டு வேலையை விட்டு தான் பட்டா ஆன்லைன் மூலம் மனு செய்ய வேண்டி இருக்கு! நகரங்களிலும் இதே நிலைமை தான்.


4.VAO க்கோ சர்வேயருக்கோ ஆன்லைனில் நிலுவையில் மனு எதுவும் இருக்க கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே ஆன்லைனில் பட்டா மனு செய்துவிட்டு பின்தொடரல் இல்லை என்றாலோ அல்லது தாமதமாக சென்று பார்த்தாலோ மனுக்களை ஆன்லைனிலே தள்ளுபடி செய்து விடுவார்கள். மனு தள்ளுபடிக்கு ஆவணங்கள் லிங்க் இல்லை அல்லது வேறு ஏதாவது காரணங்களையும் சொல்லி இருப்பார்கள். பிறகு என்ன மீண்டும் ஆன்லைன் வரிசையில் நின்று பணம் கட்டிய பிறகு மீண்டும் நீங்கள் மனு செய்தல் வேண்டும்.


5.ஆன்லைன்ல பஸ் டிக்கெட் புக் செய்வது போல ஏடிஎம் ல பணம் எடுப்பது போல பட்டா மனு செய்த உடனே பட்டா வராது. பட்டா மனு செய்வது மட்டும் தான் ஆன்லைன் முறை். மீதி வேலை எல்லாம் வழக்கம் போல் தான் தாலுகா ஆபிஸில் தொடர் களப்பணி செய்வதன் மூலம் தான் பட்டா பெற முடியும்.


6.அதாவது ஆன்லைன் மூலம் மனு செய்த ரசீதை எடுத்து கொண்டு பட்டா வாங்க போகும் நிலத்தின் முழு ஆவணங்களின் நகலையும் எடுத்து கொண்டு பழைய முறைப்படி கிராம நிர்வாக அதிகாரியையோ, சர்வேயரையோ நேரடியாக சந்தித்து, பின் தொடரல் வேண்டும். VAO சர்வேயர் LRD (LAND RECORD DRAFT) தலைமை சர்வேயர் – தாசில்தார் என அனைத்து டேபிளுக்கு பேப்பரை நகர்த்துவதும் நாம் தான் செய்ய வேண்டும்.


7.பொதுவாக பட்டா மனு செய்யும் போது முழு புலம் கொண்ட இனங்கள் , உட்பிரிவு கொண்ட இனங்கள் என இரண்டு வகையாக பிரிப்பர்.முழுபுலம் கொண்ட இனங்களின் மனுக்கள் ஆன்லைனில் VAO விடம் செல்லும்படி லாகின் வைக்கப்பட்டு இருக்கிறது. உட்பிரிவு இனங்கள் சர்வேயர் ஆன்லைனில் லாகின் வைக்கப்பட்டு இருக்கிறது, அதன்படி ஒவ்வொரு வகையான மனுவும் முறையே VAOவிற்கும், சர்வேயருக்கும் சென்று விடுகிறது.


8.முழுபுலம் பட்டா பெயர் மாற்றங்கள் VAO விடம் வந்து விடுகிறது. அவர்கள் அதனை பட்டா பெயர் மாற்றம் செய்து விடுகின்றனர். அதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.


9.உட்பிரிவு இனங்கள் தான் சர்வேயரிடம் வருகிறது, அதன்பிறகு LRD (LAND RECORD DRAFT ) தலைமை சர்வேயர் மூலம் இறுதியாக தாசில்தாரரிடம் கையெழுத்தாகிறது, அவர்களின் நடைமுறையில் நகரும் பேப்பருக்கு 8 A – ஆவணம் என்று சொல்வார்கள்.


10.அது என்ன 8 A என்றால் அது ஒரு சர்வே சட்டம், விவரமாக சொல்லனும்னா , பட்டா கோழி குஞ்சு வெளியேறுவதற்கு முன் இருக்கும் முட்டை பருவம் தான் 8A. 8A வில் தாசில்தார் கையெழுத்து போட்டவுடன் பட்டா ஆன்லைனில் ஏற்றபடுகிறது.


11. அதோடு ஆன்லைனில் பட்டா ஏறிய மகிழ்ச்சியில் நீங்கள் வந்து விடுவீர்கள ஆனால் FMB யிலும்

அ-பதிவேட்டிலும், உட்பிரிவு விவரங்கள் ஏறிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.


12.பழைய பட்டா பெயர் மாற்ற முறையில் கிராம நிர்வாக அலுவலகம் முக்கிய பங்கு வகிக்கிறது , இப்போது முழுபுலம் பட்டா பெயர் மாற்றம் மட்டும் VAO க்கும் உட்பிரிவுகள் சர்வேயருக்கும் போவதால் (பெரும்பாலும் 90% உட்பிரிவு இனங்கள்தான் ) கிராம மக்கள் தாலுகாவை நோக்கி படையெடுத்து சர்வேயரை சந்திக்கின்றனர் , சர்வேயர் நேரடியாக களத்திற்கு வருகிறார். இடத்தை பார்த்துவிட்டு பட்டாவுக்கு வழிவகை செய்கிறார்.


13.மேற்படி சர்வேயர்கள் இப்பொழுதெல்லாம் கிராம நிர்வாக அலுவலகம் பக்கமே போவதில்லை ( ஏன் என்று எனக்கு தெரியவில்லை ) அதனால் கிராம கணக்குகளில் அ- பதிவேடு , புலபட புத்தகங்களில் பதிவு செய்வது இல்லை. உதாரணமாக சர்வே நம்பர் 2A என்று இருந்தால், அது உட்பிரிவு செய்யபடும் போது 2A1, 2A2 என இரண்டாக உடையும். இதனை சர்வேயர் தான் கிராம கணக்குகளில் திருத்த வேண்டும்.VAO வுக்கு அந்த உரிமை இல்லை!


14.எனவே சர்வேயர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரடியாக வந்து A – பதிவேடு – FMB களில் , சிட்டா கணக்குகளில் உட்பிரிவை குறிக்க சொல்லி நாம் கேட்க வேண்டும். சில ஊர்களில் அ – பதிவேடு ஆன்லைன் ஆகியிருக்கும் சில ஊர்களில் FMB யும் ஆன்லைன் ஆகி இருக்கும், அதிலெல்லாம் நம்முடைய பட்டா உட்பிரிவு பதிவாகி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆகவில்லை என்றால் சர்வேயரை பின் தொடரல் செய்து அதனை சரி செய்து கொள்ள வேண்டும்.


15.அப்படி நாம் செய்யவில்லை என்றால், பட்டா ஆன்லைனில் ஏறினாலும் , VAO க்கு பட்டா மாறிய விசயமே தெரியாது போய்விடுகிறது. கிராம கணக்கில் பட்டா மாற்றமே நடக்கவில்லை என்று ஆவணங்கள் சொல்லும்.


16.ஆன்லைன் பட்டா வாங்கிவிட்டு விவசாய நிலத்தில் கிணறு போட வேண்டும் என்றால், FMB யில் கிணறு எங்கே வருகிறது என முதலில் குறிக்க வேண்டும். அதற்காக VAO வை பார்த்தால் அவர் கணக்கில் புலப்புத்தகத்தில் உட்பிரிவு செய்யாமலே இருக்கும்.உட்பிரிவு செய்தால் தான் கிணறுக்கான பாயிண்டை குறிக்க முடியும்.

எனவே உட்பிரிவு FMB யிலும் செய்து வாருங்கள் என்று VAO சொன்னால் ஆன்லைனிலே் பட்டா வந்துருச்சி , ஏன் இன்னும் FMB கட் செய்யலயே என்று VAO கிட்ட சண்டை போட்டு இருப்பீங்க.


17.பயிர் கடன் வாங்க , வீடு கட்ட வங்கி கடன் வாங்க, பயிர் இன்சூரன்ஸ்க்காக , வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் மற்றும் நில எடுப்புக்கு பணம் வாங்க, VAO கையெழுத்துடன்- அ – பதிவேடு, சிட்டா தேவைபடும் அப்பொழுது அதனை கேட்டு கேட்டு சென்றால், உங்கள் பெயரும் உட்பிரிவும், கிராம கணக்கில் ஏறி இருக்காது. அந்த நேரத்தில் அல்லல் பட்டு கொண்டு நிற்ப்பீர்கள்


18.எனவே பட்டா வாங்க முடிவு செய்தால், ஆன்லைன் பட்டா மட்டும் போதாது, அதனுடன் FMB , அ – பதிவேடு, சிட்டாவில் எல்லாம் பெயர் மற்றும் உட்பிரிவு ஏற்றப்பட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு வேலையோடு வேலையாக ஆன்லைன்ல கிராமகணக்கு இருந்தால் சர்வேயரை பின் தொடரல் செய்து அப்டேட் செய்ய சொல்ல வேண்டும். கிராம கணக்கு மேனுவலாக இருக்கும் பட்சத்தில் சர்வேயரை VAO அலுவலகம் செல்ல வைத்து கிராம கணக்கில் அப்டேட் செய்ய நாம் தான் ஒருங்கிணைக்க வேண்டும்...


No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...