*#கண்கள்* - 1

கண்கள் பாதுகாப்பில் உணவின் பங்கு அவசியமானதாகும். உடம்புக்கு ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடுதல், நேரம் தவறிய உணவுமுறை, சத்தில்லா உணவு வகைகள், பாஸ்ட் புட் வகைகள் ஆகியவைகளை சாப்பிடும்போது மலச்சிக்கலும் அஜீரணமும் ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு, ஒவ்வாமையால் தலைவலி போன்றவை ஏற்பட காரணமாய் அமைந்து விடும்.

வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் எல்லா வயதினர்க்கும் தேவையான ஒன்றாகும். நிறக்குருடு , மாலைக்கண் நோய், போன்றவைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைபாடே காரணமாக அமைகிறது. கண்கள் தொடர்பான தொற்றுநோய்கள் எளிதில் கண்களை தாக்குவதற்குக் காரணம் வைட்டமின் ‘ஏ’ குறைபாடே .

வைட்டமின் ‘ஏ’ குறைபாடுள்ளவர்கள் மீன் எண்ணய், பப்பாளி , கேரட், போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் பாதுகாப்பில் உணவின் பங்கு முக்கியமான ஒன்றாய் இருப்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

40 வயதிற்குப்பின் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஓன்று. இதற்கு வெள்ளெழுத்து என்று பெயர்., இது வியாதி அல்ல, இயற்கையின் உடல்கூறுதான் . 

கண்பார்வை மட்டுமல்ல கண்ணின் நீர் அழுத்தம் , தோற்றப்பரப்பு, கண்ணின் உட்புறமாகிய விழித்திரையை காணல் –(VISION , TENSION ,FIELDS &FUNDUS) இந்த நான்கையும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். 

குறிப்பாக பரம்பரை வியாதிகளான நீரழிவு நோய் , கண் புரை, குளுகோமோ, இரத்த அழுத்தம் , ஆகியவைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களாயிருப்பின் தங்களுக்கும் இதனால் ஏதாவது பாதிப்புக்கள் உள்ளதா என்பதை 40 வயதிற்குள் அறிந்து கொள்ளுவது மிகவும் அவசியமானதாகும். வயதான காலத்தில் இரத்த அழுத்தம், நீரழிவுநோய் , கண்ணின் நீர் அழுத்தம் ,கண்புரை, பார்வை நரம்பு கோளாறுகள், டி.பி, கிரந்தி நோய், ஆகியவைகள் மூலம் கண்பார்வை பாதிக்ககூடும். 

நமது உடலைத் தாக்கும் எந்த நோயாக இருந்தாலும் அது கண்களோடு தொடர்புள்ளாதாக அமைகிறது. நீரழிவு இரத்தக்கொதிப்பு , ஸிபிலிஸ், மேகநோய், எலும்புருக்கி, கக்குவான், இருமல், முதலிய நோய்களால் கண்களில் சில அறிகுறிகள் தோன்றும். 

கண்களை பரிசோதிக்கும்பொழுது கண்களின் ஒளித்திரையில் ஏற்படும் சில அறிகுறிகளைக் கொண்டு அதனடிப்படையில் நோயாளி நீரழிவு நோய் (அ) இரத்த கொதிப்பால் துன்பப்படுகிறார் என்பதனை அறிந்து கொள்ள முடியும். 

நீரழிவு நோயால் ஒருவருக்கு பார்வை குறைவு ஏற்பட்டால் முக்கியமாக ஒளித்திரையில் ஏற்பட்ட இரத்த கசிவே காரணமாக இருக்கும் மற்றும் நீரழிவு நோயால் தசைநாருக்கு வரும் நரம்புகள் கெட்டு கண்விழி ஒரு பக்கம் போக முடியாத காரணத்தால் ஒரு பொருள் பலவாகத் தோன்றும்.

 இப்பிரச்சனை உள்ளவர்களின் சிறுநீரை ஆய்வு செய்து சர்க்கரையின் அளவை கண்டறியலாம். இந்த நீரழிவு நோய்களுக்கு அடிக்கடி கண் இமைகளில் கட்டி ஏற்படும், கண்புரை ஏற்படும். 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...