சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வட்டார போக்குவரத்து துறை, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் கேத்தி லைட்லவ் நினைவு மேல்நிலை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நெல்த்ராப் தலைமை தாங்கினார்.

பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் பரமேஸ்வரி வரவேற்றார். 

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் துவக்கி வைத்து பேசும்போது சாலை பாதுகாப்பு என்பது சாலைக்கு அல்ல நமக்கு, மனிதர்கள் சாலையில் செல்லும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் வழங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வாகனங்களில் செல்லும் போது மட்டுமல்ல நாம் சாலையில் நடக்கும் போதும் கவனமுடன் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது சாலையில் செல்லும்போது மெதுவாக நடந்து சாலையை கடப்பது நல்லது, வேகமாக ஓடுவதால் வாகனத்தில் மோதும் அபாயம் அதிகம் உள்ளது. விதிகளை மதித்து சென்றால் விபத்து தவிர்த்து உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கலாம் என்றார்.

வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் பேசும்போது

வாகனங்களில் செல்லும் போது கவனமுடன் செல்ல வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் மலைபகுதியாகவும், வளைவுகள் அதிகம் உள்ளதாலும் மேடான பகுதியாக இருப்பதாலும் வாகனங்கள் அதிகபட்ச 40 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க வேண்டும்.   

வாகனங்களில் ஆர் சி புக், இன்சூரன்ஸ், மாசு சான்று உள்ளிட்டவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 

அதிவேகம், மற்றும் கவன சிதறல்கள், சாலையில் உள்ள குழிகள் போன்றவை விபத்திற்க்கான காரணங்கள் ஆகும். 

விபத்தில் சிக்கியவர்கள் தலை, கைக்கால், முதுகு அடிப்பட்டு, கிடப்பவர்களை பார்த்தால் வாகனங்கள் இயக்குவதில் தானாகவே கவனம் மற்றும்  பொறுப்பு ஏற்படும்.

தற்போது விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் வாகனங்களில் வேகத்தை கண்காணிக்க மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கல்லார் மற்றும் காட்டேரி ஆகிய இடங்களில் வேக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள பட உள்ளது. இது திருப்பதிக்கு அடுத்து நீலகிரியில் அறிமுக செய்யப்பட உள்ளது. இதன்மூலம் வேகமாக இயக்கும் வாகனங்கள் கண்டறிந்து அபராதம் விதிக்கபடும், மலை பகுதியில் வேகமாக இயக்குவது தடுக்கப்படும்.

லைசன்ஸ் இன்சூரன்ஸ் ஆகியன இல்லாவிட்டால் 1000, ஹெல்மெட் அணியாவிட்டால்  1000 அபராதமும், போதையில் வாகனங்கள் இயக்கினால் 10,000 அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் இந்தியாவில் 16  முதல் 18 வயதுடையவர்கள் மிகஇலகு வாகனம் இயக்கலாம், ஆனால் மின்சாரம் மூலம் இயங்கும் 25 கிலோவாட்டுக்குள் திறன் உடைய வாகனம் லைசென்ஸ் இல்லாமல் ஒட்டலாம் ஆனால் அதற்கு மேல் திறன் கொண்ட மின்சார வாகனங்கள் இயக்க உரிமம் கட்டாயம் வேண்டும். என்றார்.

நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் பேசும்போது சாலையில் செல்லும் போது இருபுறங்களிலும் கவனித்து சாலையை குறுக்கிட வேண்டும். செல்போன் பேசியபடி வாகனங்கள் இயக்குவதால் கவனம் திசை மாறி விபத்து ஏற்படுகிறது. 

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலை கவசம் அணிந்தும் 4 சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்தும் செல்லும் போது விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்

18 வயதிற்கு குறைவான நபர்கள் வாகனங்கள் இயக்கும் போது அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் பெற்றோர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றார். 

நிகழ்சசியில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர் பிரபாகரன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...