நில உச்சவரம்புச் சட்டம்

 நில உச்சவரம்புச் சட்டம்


நில உச்சவரம்பு (Ceiling on Land Holding) என்பது தனி நபர்கள் வைத்திருக்கும் நில உடைமைக்கு உச்சவரம்பை நிர்ணயித்து அதற்கு மேற்பட்ட உபரி நிலங்களை அரசு கையகப் படுத்தும் முறை ஏதுவாக 1958ல் இந்திய அரசால் கொண்டு வரப்பெற்ற சட்டம் ஆகும்.


 வேளாண்மையைச் சீர்திருத்தும் நோக்கத்துடன் குடிவாரச் சட்டங்கள் தவிர வேறுபல நடவடிக்கைகளும் இந்திய அரசால் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று நில உடைமைகளுக்கு உச்சவரம்பை நிர்ணயிப்பதாகும்.


 ஒரு குடும்பம் அல்லது தனிநபருக்குரிய உயர்ந்த பட்ச நிலங்கள் என தீர்மானித்து அதற்கு மேல் உள்ள நிலத்தை அதற்குறிய இழப்பீட்டுத் தொகையை நில உடமையாளருக்கு வழங்கி கையகப்படுத்தும் நிலங்களை உபரி என வகை படுத்திக்கொள்ளும் நடைமுறைக்கு உரியவாறு ஏற்படுத்தப்பட்டது நில உச்சவரம்பு சட்டம் என்கிறோம். 


இது இரண்டு பிரிவுகளாகும். 1. தற்போதுள்ள உடைமைகள் மீது உச்சவரம்பு நிர்ணயிப்பது. 2. எதிர்காலத்தில் வாங்கப்படும் நிலங்கள் மீது உச்சவரம்பு நிர்ணயிப்பது.


நில உச்சவரம்புச் சட்டத்தின் இயல்புகள்


இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் மாநில அரசுகள் நில உச்சவரம்புச் சட்டங்களை இயற்றின. ஆனால் நில உச்சவரம்பின் அளவு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டது. 1972-ல் நடந்த மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தில் நாடுமுழுவதும் ஒரே மாதிரியான நில உச்சவரம்பு அளவே கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 


இந்தியாவில் நில உச்சவரம்புச் சட்டங்கள் கீழ்வரும் இயல்புகளைக் கொண்டுள்ளன.


1972-ஆம் ஆண்டிற்கு முன் ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபரும் குறிப்பிட்ட அளவு நிலம் வைத்துக் கொள்ள நில உச்சவரம்பு குடும்பம் முழுவதற்குமே பொருந்துவதாக உள்ளது.


 குடும்பம் என்பது கணவன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் கொண்டது. ஒரு குடும்பத்தில் ஐந்து நபர்களுக்கு அதிகமான நபருக்கு அதிகப்படியான நிலம் அனுமதிக்கப்படும்.


1972-க்கு முன் உயர்ந்த பட்ச நில அளவும் அதிகமாக இருந்தது. சான்றாக ஆந்திரப்பிரதேசத்தில் 25 முதல் 200 ஏக்கராகவும், தமிழ்நாட்டில் 12 முதல் 60 ஏக்கராகவும் இருந்தது. 


இது 1972-க்குப் பின் சீரமைக்கப்பட்டது. இருபோக சாகுபடிக்கு நீர்ப்பாசன வசதியைக் கொண்ட பகுதிகளில் ஒரு குடும்பத்திற்கான உச்சவரம்பு 20 ஏக்கராகவும்; தனியார் நீர்ப்பாசன வசதியைக் கொண்ட நிலங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு உச்சவரம்பு 40 ஏக்கராகவும்; பிற நிலங்களுக்கு 60 ஏக்கராகவும் உள்ளது.


1972-க்கு முன் நிலஉச்ச வரம்பிலிருந்து பலவகையான சிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் நில உச்சவரம்புச் சட்டங்கள் தோல்வியுற்றன. 1972-க்குப் பின் இயற்றப்பட்ட சட்டங்களில் விலக்கு அளிக்கப்பட்ட நிலங்களில் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டது

கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...