கூடலூர் பாரதியார் கலை அறிவியல் கல்லூரி கூடலூர் பாரதியார் கலை அறிவியல் கல்லூரி,
 காசிகா IAS அகாடமி,
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
 ஆகியன இணைந்து நடத்திய *மத்திய மாநில அரசு பணிக்கான போட்டி தேர்வுகள் எதிர்கொள்வது* குறித்த விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.


நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் *மகேஸ்வரன்* வரவேற்றார்.  


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் *காளிமுத்து* , கல்லூரி பேராசிரியர் *பழனிசாமி*  ஆகியோர்1 முன்னிலை வகித்தனர்.


தலைமை தாங்கிய கூடலூர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் *பழனிசாமி* பேசும்போது

இன்றைய சூழலில் வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது.  எல்லாம் கணினி மயமாக மாறிவிட்டது.

எனவே வேலைவாய்ப்பு போட்டிகள் நிறைந்து உள்ளது.

போட்டிக்கான தேர்வுகளுக்கு நூலகங்களில் புத்தகங்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

வேலை பெற மாணவர் படிப்போடு போட்டிதேர்வுகளை எதிர்கொள்ள  தயாராக வேண்டும் என்றார்.


தேவாலா துணை கண்காணிப்பாளர் *சக்திவேல்* பேசும்போது
நமக்கு 18 வயதானால் வாக்குரிமை உள்ளதுபோல படித்தபின் வேலை தேடும் நிலை உருவாகும்.

குறிக்கோள்களை நிர்னயித்து அதற்கான முயற்சி எடுக்க வேண்டும்.

இப்பகுதியில் தோட்ட தெழிலாளியின் பிள்ளையாக பிறந்து  IAS தேர்வில் வெற்றி பெற்று கொச்சியில்  சப் கலெக்டராக பணியாற்றிவரும் இன்பசேகர் போன்று முயற்சி எடுத்து வெற்றி பெற வேண்டும்.

பசி எடுப்பது போல முயற்சி எப்போதும் இருக்க வேண்டும்.

வாய்ப்பு கிடைக்கவில்லை என ஒதுங்குவதைவிட வாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும்.


தேவாலா ஜீடிஆர் பள்ளி தலைமை ஆசிரியர் *சமுத்திரபாண்டியன்* பேசும்போது  

முயற்சி இருந்தால் மட்டுமே அதனை அடைவதற்கான வழிகள் கிடைக்கும்,

இலக்கை அடைய மேற்க்கொள்ளும் போது நிறைய கஷ்டங்களையும் எதிர்க்கொள்ள வேண்டும்.
"
சூழ்நிலைகளுக்கேற்ப நம்மை மாற்றி போட்டி தேர்வுகளை எதிர்கொண்டு அரசு பணியில் சேர வேண்டும் என்றார்.


காசிகா IAS அகாடமி பயிற்றுனர் *சுரேஸ்குமார்* பேசும்போது

அரசு துறைகளில் கூடலூர் பந்தலூர் பகுதிகளில் ஏராளமான காலி பணியிடங்கள் உள்ளது.

இவை நிரப்பபடும்போது வெளிமாவட்டங்களை சார்ந்தவர்களே அதிகம் பணியில் சேருகின்றனர்.

அவர்கள் சோ்ந்த உடனே சொந்த மாவட்டம் மற்றும் அருகாமை மாவட்டங்களுக்கு சென்றுவிடுகின்றனர்.

 அதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் அரசு பணிக்கு வரவேண்டும்.
அதற்காக கூடலூர் பந்தலூர் பகுதியில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.


கூடலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் *சிவசுப்பிரமணியம்* பேசும்போது போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு விண்ணப்பித்து விட்டு படிப்பதன் மூலம் வெற்றி பெற முடியாது.  தொடர் முயற்சி எடுத்து படிக்கவும் நூலகங்கள் மூலம் தேர்வுக்கான தகவல்களை திரட்டி கொள்ள வேண்டும் என்றார்.


தொடர்ந்து போட்டி தேர்வுகளான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

கல்லூரி போராசிரியர்கள் மாணவர்கள் 2000த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம்  நன்றி கூறினார்.


CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND
ENVIRONMENT PROTECTION - (CCHEP_NLG)
THE NILGIRIS  643 233.
Web:
www.cchepnlg.blogspot.in  
www.cchepeye.blogspot.in

Facebook:  
http://facebook.com/cchepnilgiris

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...